Header Ads



மாஷித்தாவின் கைக் குழந்தையைப் போன்று ஷாயிக், நீங்களும் சுவனத்து வாசணையை நிச்சயம் நுகர்ந்திருப்பீர்கள்...!

நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிகவும் வாசனையை கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அந்த அற்புதமான வாசனையைப் பற்றி கேட்டார்கள்.

அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ''இந்த அற்புதமான வாசனை 'மாஷித்தா'வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை'' என்று கூறினார்கள்.

தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் மாஷித்தாவின் வரலாறை விவரிக்கும் படி கேட்க, ஜிப்ரயீல் (அலை)  அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

"மாஷித்தா"- பிர்அவ்னின் குடும்பத்துப் பெண்களுக்கு தலை வாரி விட்ட பெண்.

ஒரு நாள் அந்த தாய்  பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரிக் கொண்டிருந்த போது தற்செயலாக சீப்பு கீழே விழுகிறது.

உடனே மாஷித்தா "பிஸ்மில்லாஹ்"என்று கூறினார்.

அப்போது பிர்அவ்னின் மகள் "நீ அல்லாஹ் என்று கூறியது என் தந்தை பிர்அவனைத் தானே?" என்று வினவினாள்.

அதற்கு மாஷித்தா "இல்லை! என்னையும் உன் தந்தையையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவன் அல்லாஹ்வை" என்று கூறினார்.

உடனே பிர்அவ்னின் மகள் போய் தந்தையிடம்  குற்றஞ் சொல்ல அவன் மாஷித்தாவை சபைக்கு அழைத்து முழு விடயத்தையும் வினவினான்.

பிர்அவ்ன் கேட்டான் "என்னைத் தவிர உனக்கு வேறு யாரும் கடவுள் உண்டோ?" என்று!

அதற்கு மாஷித்தா "ஆம்! நிச்சயமாக என்னையும் உன்னையும் படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்தான் என் இறைவன்" என்றார்  உறுதியோடு.

கோபங் கொண்ட பிர்அவன் நெருப்பை மூட்டி செம்பால் ஆன பெரும் பாத்திரத்தில் எண்ணையைக் கொதிக்க வைத்து ஒவ்வொரு பிள்ளைகளாக, 

நெருப்பில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் எறிந்தான். ஆனால் மாஷித்தா மனந்தளறவுமில்லை, அவருடைய ஈமானில் சற்றேனும் உறுதி குறையவுமில்லை.

கடைசியாக பிர்அவன் மாஷித்தாவையும் அவருடைய மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையையும் தூக்கி எறியும் படி கூறினான்.

அப்போது மாஷித்தா தன் மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையை பார்த்து "ஒரு பாவமும் அறியாத இந்த பிஞ்சும் சேர்ந்து எண்ணையில் கருகப் போகிறதே" என்று தயங்கினார்.

அப்போது அல்லாஹ் தஆலா அந்த குழந்தைக்கு பேசும் சக்தியை கொடுத்தான். அது

"கவலைப்படாதே தாயே! நீ சத்தியத்தில் இருக்கிறாய், பொறுமைக் கொண்டு முன்னேறிச் செல், மறுமையுடைய வேதனைகளும் தண்டனைகளும் இதை விடக் கொடியது" 

என்று ஆறுதல் கூறியது. 

இறுதியாக  மாஷித்தாவும் அவரது கைக் குழந்தையுடன் எண்ணைப் பாத்திரத்தில் எறியப்பட்டார்கள்.

தற்போது இதே நிலை தான் எமது நாட்டிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அல்லாஹ் தஆலா அழகிய பொறுமையை வழங்குவானாக.

- By. S.L.M. IMTHIYAZ -


1 comment:

  1. பொறுமையை விடுங்கங்க. எவ்வளவு பொறுமையை அனுபவிச்சுட்டோமுங்க. நான் மூணாம் கிளாஸ் படிக்கக்குள்ள எங்கட Sir ஒன்னை மாத்திரம் எப்பவும் திருப்பித் திருப்பி சொல்லுவாருங்க. நாம சொவத்துல (door) பந்தை எறிஞ்ஞம்னா அது போன வேகத்தில் எங்ககிட்டத்தான் திரும்பி வரும் னு. நிச்சயமா அது திரும்பி வருங்க. கவலைப்பட வேணாம் பாருங்க. யார் யார் எல்லாம் இதால பாதிக்கப்பட்டு இருக்காங்களோ அவங்கட கண்ணுக்கு முன்னால எறிஞ்ஞ பந்து மிக வேகமா திரும்பி வரும்ங்க.

    ReplyDelete

Powered by Blogger.