Header Ads



ஜனாஸா எரிப்புக்கு எதிராக, பிரான்சில் சனிக்கிழமை, 19 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், பலாத்காரமாக எரிக்கப்படுவதற்கு எதிராக, பிரான்சில்  பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும்  சனிக்கிழமை, 19 ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் Place de la République என்ற  இடத்தில், பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பிரான்சில் வசிக்கும் இலங்கையர்களினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரான்சில் வாழும் சகல முஸ்லிம்களையும் சுகாதார பாதுகாப்புடன், கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் பற்றிய மேலதிகத் தகவல்களை பெற சகோதரர் ரமழானை 06 52 16 41 59  என்ற  இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்...!

1 comment:

Powered by Blogger.