எங்கள் சமுகத்திற்கு அல்லாஹ் போதுமானவன்..! எரிப்பதற்கும் மேலாக என்ன செய்யப் போகிறாய்..?
- S.Hameeth -
இறந்த எங்கள் சொந்தங்களை
எரிப்பதற்கும் மேலாக
என்ன செய்ய உத்தேசம்
இனவாதமே?
இறை இல்லங்களை எரித்தாய்;
உள்ளங்கள் உருகி அழுதோம்!
புனித குர்ஆன்களை எரித்தாய்;
பொறுக்க முடியாது
புலம்பிக் கதறினோம்!
நிம்மதியாக வியாபாரம் செய்த
நிலையங்களை எரித்தாய்;
நெஞ்சங்கள் நிலைகுலைய
நெக்குருகி நின்றோம்!
வாகனங்களை எரித்தாய்;
வழியேதுமின்றி
விழிநீரை வெளியேற்றினோம்!
வசித்த வீடுகளையும் எரித்தாய்;
இதயங்கள் கசிந்து கண்ணீரில்
இமை நனைத்தோம்!
இவையெல்லாம் போதாதென்றா
இனவாதமே,
இப்போது எங்கள்
இறந்த உறவுகளையும்
எரித்துச் சாம்பலாக்குகிறாய்?
இன்றைய தினம் எங்கள்
உரிமைக்கான நீதியையும்
எரித்துப் பஸ்மமாக்கியிருக்கும்
இனவாதமே,
இதற்கும் மேலாக
இனியும்
என்ன செய்ய இருக்கிறாய்?
ஆனாலும் ஒன்று...
எங்களை நீ
உயிரோடு எண்ணெய்
ஊற்றி எரித்தாலும் கூட
நாங்கள்
இருபதென்ன,
இருநூறு திருத்தங்களையும்
ஆதரித்து
உயர்த்துவோம் கைகளை!
எங்கள் ஏழைச் சமுகத்திற்கு
அரசியல்வாதிகள் அல்ல-
அல்லாஹ் போதுமானவன்!
100% உண்மைகளை தாங்கிய அழகிய கவிதை நீ!
ReplyDeleteIniyaavathu intha sillaraigal....20+ Unarvaargala? unarnthu enna payan....Boolshit!!!
ReplyDeleteVery good piom.that says truth,one day may reply from Allah.
ReplyDeleteDo not worry Allah is always with us they can't burn our iman
ReplyDeleteஅருமையிலும் அருமை
ReplyDeleteபோராட வேண்டும்.... இன்னும் இன்னும் பல வழிகளில்....
ReplyDeleteஎதோ ஒரு வகையில் எமது வெளிப்பாடுகளை வெளியே எடுத்து காட்ட வேண்டும்.
எமது முயற்சி ஒரு நாள் ஆமீன் ஆகும்...