Header Ads



இலங்கையில் தினமும் 60 பேர் புகைபிடிப்பதாலும், 50 பேர் மதுபானத்தினாலும் இறக்கின்றனர்


இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நால்வர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்

மதுபானம் மற்றும் புகையிலை பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் நால்வர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் டாக்டர் சமதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

தொடரந்தும் கருத்த தெரிவித்த அவர்,

இலங்கை மக்கள் நாளொன்றுக்கு ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான தொகையை புகையிலை மற்றும் மதுபான பாவனைக்கு செலவிடுகிறார்கள்.

இலங்கையில் தினமும் சுமார் 60 பேர் புகைபிடிப்பதால் இறக்கின்றனர், சுமார் 50 பேர் மதுபானம் காரணமாக இறக்கின்றனர், இந்த இரண்டு காரணங்களால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 பேர் இறக்கின்றனர்.

சிகரெட் மற்றும் மதுபானம் மீது அரசாங்கம் வரி விதித்து வருமானத்தை பெற்றாலும், போதைப்பொருள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வரி வருவாயை விட மூன்று மடங்கு அதிகமாக செலவிடவேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. அப்ப கொரோனா எல்லாம் ஒரு பயங்கர நோயா?

    ReplyDelete

Powered by Blogger.