Header Ads



கொழும்பில் கொரோனாவால் 6 மாதங்களில் 78 பேர் மரணம்


  (எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக, கடந்த 6 மாதங்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 78 பேர் தமது வீடுகளிலேயே மரணித்துள்ளதாக, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்தார்.

இக்காலப் பகுதியில் வீடுகளில் உயிரிழந்த 383 பேரின் உடல்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொண்டு செல்லபப்பட்ட நிலையில், அவைகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளிலேயே 78 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வீடுகளில் மரணிப்போருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டபோதும், வீட்டில் உயிரிழந்த முதல் கொவிட் தொற்றாளர் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதியே அடையாளம் காணப்பட்டதாகவும், அது முதல் இன்று (27) பகல்  வரையிலான காலப்பகுதியில் இந்த வீடுகளில் நிகழ்ந்த 78 கொவிட் மரணங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதான சட்ட வைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் கூறினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு, கடந்த முதலாம் திகதி வரை 25 ஆம் திகதிவரை வீடுகளில் நிகழ்ந்த 130 மரணங்கள் பதிவானதாகவும் அதில் 37 மரணங்கள் கொவிட் 19 தொற்றினால் நிகழ்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.