Header Ads



கொரோனாவிற்கு மருந்து கோரி ஆர்ப்பாட்டம் - 5 பேர் கைது


கொரோனா வைரசிற்கு மருந்து கண்டிப்பித்ததாக கூறப்படுகிற கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இல்லத்திற்கு முன் இன்று மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதன்போது ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலி தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் இருந்ததால் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்களது வீடுகளில் கொரோனா தொற்றுக்கு இலக்காணவர்கள் இருப்பதால் அவர்களுக்கு மருந்து கோரியே இவ்வாறு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இடையே கொரோனா தொற்றுக்கு உள்ளானர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தம்மிக்க பண்டாரவின் மருந்து இதுவரை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மீள் அறிவிப்பு வரும் வரை மருந்தை விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதென தம்மிக்க பண்டாரவின் வீட்டின் வாயிலில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.