Header Ads



கொரோனாவுக்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவர் மரணம், கிழக்கில் 3 வது உயிரிழப்பு


(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டு கல்முனை அஷ்ரஃப்  ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் தகவலை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகைய்யா லதாகரன் மெட்ரோ நியூஸுக்கு உறுதிப்படுத்தினார்.

உயிரிழந்தவர்  சாய்ந்தமருதுவைச் சேர்ந்தவர் எனவும் இவர்  நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  மூன்றாக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.