Header Ads



காரின் டயர் வெடித்ததால் 2 பேர் மரணம் - 3 பேர் படுகாயம் - யாழில் சம்பவம்


யாழ்ப்பாணம், தென்மராட்சி நுணாவில் A - 9 வீதியில் கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50  மணியளவில்   இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த  கார் ஒன்றின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட  ஐவர் காரில் பயணித்துள்ளனர்.

அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய  பெண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. நான் ஜப்னா முசிலிமின் நீண்ட நாள் வாசகர். ஏன் கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன......நான் பல தடவைகள் கொமண்ட் செய்துள்ளேன். இதனை திருத்திக்கொள்ளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.