Header Ads



1950 கிலோ உலர்ந்த, மஞ்சளை வைத்திருந்தவர் கைது


கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் 1950 கிலோ 420 கிராம் கடத்தப்பட்ட உலர்ந்த மஞ்சளை வைத்திருந்த அப்பிரதேச வாசி ஒருவர் இன்று பொலிஸ் விஷேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் பெற்ற புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து இந்தச் சோதனை இன்று -21- நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.