Header Ads



PCR பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின், வீடுகள் சீல் வைக்கப்படும் – அஜித்ரோகண எச்சரிக்கை


பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின் வீடுகள்  சீல் வைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் பொ லிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு ஆஜராக வேண்டாம் என்று நான்கு பேர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்குப் பிரச்சாரம் செய்து வருவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

தற்போது 18 பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரி வுகள், கம்பஹா மாவட்டத்தில் 05 பொலிஸ் பிரிவுகள் மற் றும் அடுலுகம பிரதேசத்தில் 09 கிராம சேவை பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மற்றும் அலவத்த பிரதேசத்தில் 02 கிராம சேகவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர பல கிராமக சேவகர் பிரிவில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள பொதுச் சுகாதார பிரிவு அறிவித்தல் விடுத்தால் தவிர்க்காமல் பரி சோதனை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்களுக் குக் கோரிக்கை விடுக்கிறோம்.

No comments

Powered by Blogger.