PCR முடிவுகளை 3 மணித்தியாலங்களுக்குள் பெற முடியும் - இலங்கைக்கு உதவும் சுவிட்ஸர்லாந்து..
இலங்கையின் கொரோனா தடுப்பு திட்டத்துக்கு உதவும் வகையில்
பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி தளத்தில் பீசீஆர் பரிசோதனை கருவிகளை பொருத்துவதற்கு சுவிட்ஸர்லாந்து உதவியளித்துள்ளது.
அத்துடன் 30ஆயிரம் பீசீஆர் சோதனை கட்டளைகளையும் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிட்ஸர்லாந்தின் கொழும்பு தூதரகம் இந்த உபரகணத்தொகுதியை இன்று -26- சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளித்துள்ளது.
இந்த உபகரணத்தின் மூலம் நாளொன்றுக்கு 1300 பீPசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். அத்துடன் பீசீஆர் முடிவுகளை மூன்று மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொள்ளமுடியும்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும்போது அவர்கள் மத்தியில் பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவே இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக சுவிட்ஸர்லாந்தின் கொழும்பு தூதரகம் தெரிவித்துள்ளது.
Post a Comment