Header Ads



கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு


கண்டி – திகன பகுதியில் நேற்றிரவு 2 ரிக்டருக்கும் குறைந்த நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

பல்லேகல மற்றும் மஹகனதராவ பகுதிகளில் அமைந்துள்ள நிலஅதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

கண்டி மாவட்டத்தின் திகன, அம்பகோட்டை மற்றும் அளுத்வத்தை ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் மூன்று மாத காலப்பகுதியில் பதிவாகும் ஐந்தாவது நிலஅதிர்வு இதுவென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.