Header Ads



சிறைச்சாலைக்குள் மோதல், ஒரு தரப்பினர் தீ வைத்துள்ளனர் - ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு


மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளினால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளை தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

அதில் ஒரு தரப்பினர் சிறைச்சாலையினுள் தீ வைத்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.