Header Ads



கொரோனா தொற்றால் மக்கள் தமது, அன்றாட கடமைகளிலிருந்து விலகியிருக்க முடியாது - நாமல்



கொரோனா தொற்றால் மக்கள் தமது அன்றாட கடமைகளிலிருந்து விலகியிருக்க முடியாதென தெரிவித்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, சுகாதார பரிந்துறைகளுக்கு அமைய, இன்று எம்மால் வாழவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கொரோனாவால் இன்று உலகமே பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதால், எமக்கும் இதன் தாக்கம் உள்ளதென்றும், இதற்கமைய அரச பொறிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.


கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.