Header Ads



சஹ்ரானின் மனைவியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூறிய, எரானை விசாரணைக்கு அழைப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ணவை பொலிஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்

ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டிசில்வா இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹாசிமின் மனைவியின் பாதுகாப்பு குறித்து தெரிவித்த கருத்திற்காக எரான் விக்கிரமரட்ணவை சிஐடியினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர் என ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவரிடம் விசாரணை செய்ய என்னயிருக்கின்றது, அவரது வேண்டுகோளை நடைமுறைப்படுத்தினால் போதும் எனவும் ஹர்ச டிசில்வா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.