Header Ads



சஹ்ரானின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு



2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பாத்திமா ஹாதியா உள்ளிட்ட 05 சந்தேக நபர்களையும் நவம்பர் 25ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியல் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்  இன்று (11) உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர், சஹ்ரானின் மனைவி உள்ளிட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.