றிசாத் பதியுதீனை படுகொலை செய்ய முயற்சியா..? விசாரணை வேண்டுமென்கிறார் நளின் பண்டார
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
சஹ்ரானின் தாக்குதல் விடயத்தில் ஒரு புள்ளியாகப் பார்க்கப்பட்ட நாமல் குமார நேற்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
ரிஷாத் பதியுதீனைப் படுகொலை செய்ய 15 கோடி ரூபா ஒப்பந்தத்தில் திட்டமொன்று கருணா அம்மானுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணா அம்மான் அரசுடன் தொடர்புபட்டவர். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேண்டிய ஒரு நபர். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுக்கு முன்னர் நாமல் குமார இப்படித்தான் காணொளி, சி.டி. என்பனவற்றை வெளியிட்டார். ஆகவே, இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
பிரான்ஸிலுள்ள துஸார பீரிஸ் என்கின்ற நபரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இவ்வாறு தொடர்புபட்டிருந்தால் அவரை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது, தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பகையை ௨ருவாக்கி லாபம் காணச் செய்யும் ஒரு நாடகமன்றி வேரொன்றுமல்ல! தமிழ், முஸ்லிம் சகோதரர்களே, சதிவலையில் சிக்கி விட வேண்டாம்!
ReplyDeleteஇது, தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பகையை ௨ருவாக்கி லாபம் காணச் செய்யும் ஒரு நாடகமன்றி வேரொன்றுமல்ல! தமிழ், முஸ்லிம் சகோதரர்களே, சதிவலையில் சிக்கி விட வேண்டாம்!
ReplyDeleteதற்போதும் அவருக்கு மரண அச்சுறுத்தல் தான்.
ReplyDeleteரிஷாட் விதத்தில் முஸ்லீம் தலைவர்களும் முஸ்லீம் அரசியல் வாதிகளும் காட்டும் மௌனம் எதோ அரசியல் நாடகமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.
ReplyDeleteஇது, தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பகையை ௨ருவாக்கி லாபம் காணச் செய்யும் ஒரு நாடகமன்றி வேரொன்றுமல்ல! தமிழ், முஸ்லிம் சகோதரர்களே, சதிவலையில் சிக்கி விட வேண்டாம்!
ReplyDeletegood
ReplyDelete