Header Ads



தேர்தலில் நானே வென்றேன் - உரிமை கோரும் டிரம்ப்


அமெரிக்க தேர்தலில் நானே அதிக அளவில் வென்றேன் என்ற ஒற்றை வரியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப். முன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப். பிறகு அந்த பதிவை நீக்கி விட்டு, மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

பென்சில்வேனியா மாகாணத்தில் கிட்டத்தட்ட வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. அந்த மாகாணத்தில் ஜோ பைடனுக்கு சாதகமாக முடிவுகள் வந்தால், அவர் அமெரிக்க அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.

இந்த நிலையில், டிரம்ப் தரப்பு நடத்தவிருக்கும் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.