Header Ads



முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி, எவராலும் ஆட்சி நடத்த முடியாது, அது 20 ம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது - மைத்திரிபால


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி இறுதியாக நேற்று (25) சாட்சியம் வழங்கிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறினார். 

தாக்குதலுக்கு காரணமான சஹாரான் ஹசிமிற்கு பின்னாள் பலம் பொருந்திய வெளிநாட்டு மூலைசாலி ஒருவர் இருந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார். 

இதன்போது முன்னாள் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்pனர்கள் இறுதியான கேள்விகளை எழுப்பினர். 

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, ´உங்கள் மேல் தேசிய பாதுகாப்பு பேரவையை கூட்டவில்லை என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இது தொடர்பின் உங்கள் தரப்பு நிலைப்பாடு என்ன?´ என வினவினார். 

´தேசிய பாதுகாப்பு பேரவை ஒரு சட்டரீதியான, யாப்பிற்கமைவான அமைப்பு அல்ல. அவசரகால சட்டத்தின் கீழ் மட்டுமே பாதுகாப்பு பேரவையை கூட்ட முடியும். ஆனால் சம்பிரதாயபூர்வமாக அனைத்து அரசாங்கங்களும் அந்த பேரவையை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அதில் ஒரு நிரந்தர சட்டரீதியான தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பு சொல்ல கூடிய ஒருவர் இல்லாதது மிகப்பெரிய குறைப்பாடு´ என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார். 

இதனை அடுத்து ஆணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வூப்பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பணிப்பாளரும், பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவின் உத்தரவிற்கமைய செயற்பட்டதாக கூறப்படும் உங்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி மற்றும் அது தொடர்பான காரணங்களுக்காக சஹரான் தொடர்பில் கடுமையான செயற்பட்ட நாலக்க சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என வினவினார். 

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ´ மேற்கண்ட விடயம் தொடர்பில் கூற தனது அறிவு குறைவானது. என்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்தமை பொலிஸ் திணைக்களத்தி; நிலவிய அடிப்படை பிரச்சினை என்பதே எனது எண்ணம். ஆதற்காக நாலக்க டி சில்வாவுக்கு பணி இடை நீக்கத்திற்கும், விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டியதாய் ஆயிற்று´ என கூறினார். 

உங்களின் ஆட்சிக்காலத்தில் ரிதிதென்ன உள்ளிட்ட பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கு எதிராக உங்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என ஓய்வூப்பெற்ற அமைச்சரவை செயலாளர் வினவினார். 

இதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, ´அதாவது எனது ஆட்சிக்காலத்தின் 4 வருடம் நீதி மற்றும் அமைதி அமைச்சிப் பொறுப்பை மற்றைய தரப்பினரே வகித்தனர் அந்த சந்தர்ப்பத்தில் புலனாய்வு பிரிவினரை பலவீனப்படுத்தியமை, சிறையில் அடைத்தமை ஆகியன நடந்தன. அப்போதே பிரிவினைவாதம் தலைத்தூக்கியது. 4 வருடங்களாக குறித்த தரப்பினரிடம் நீதி மற்றம் சட்ட அமைச்சு காணப்பட்ட நிலையில் அவர்களால் செய்யய முடியாமல் போனவற்றை 4 மாதங்களில் என்னால் செய்ய முடியாது. மற்றது முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி எவராலும் ஆட்சி நடத்த முடியாது. அது அண்;மையில் நடைபெற்ற இருபதாம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது. அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முஸ்லிம் உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்பட்டது. 

அதன்பின்னர் கேள்வியெழுப்பிய ஓய்வூப்பெற்ற அமைச்சரவை செயலாளர் ´தாக்குதலின் பின்னணியில் சூழ்ச்சி இருப்பதாக கூறினீர்கள் அப்படி சூழ்ச்சி என கூறியதன் மூலம் நீங்கள் என்ன விடயத்தை குறிபிட்டிர்கள் என வினவினர். 

இதற்கு பதிலளித்த அவர், மைத்திரி, ´என்னிடம் உள்ள தகவல்களுக்கு அமைய சஹாரான் இந்த பயங்கரவாத குழுவின் தலைவர் இல்;லை என்பது தெரியும். ஏனேனில் அமைப்பு ஒன்றை முன்கொண்டுச் செல்ல வேண்டுமாயின் தலைவர் ஒருவர் அவசியம். அவ்வாறு இருக்கும் போது தலைவர் என்பவர் இதற்கு முன் நின்று செயற்பட்டு தற்கொலை செய்துக்கொள்ள மாட்டார். இப்படியிருக்கும் போது 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே இவ்வாறான தாக்குதலை நடத்த முயற்சித்திருப்பார்களாயின் ஏன் நடத்தவில்லை என சந்தேகம் எழுகின்றது. உலகின் பிரசித்;திப்பெற்ற புலனாய்வாளர்கள் தாக்குதலின் பின்னர் நாட்டுக்கு வந்தனர். அவர்களால் கூட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அறிய முடியவில்லை. தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என்பதுடன் சஹாரான் ஹசீமிற்கு பின்னனாள் ஏதோவொரு வெளிநாட்டு சக்தி இருந்துள்ளது. என சந்Nதுகம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி இறுதியாக ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.

3 comments:

  1. அந்த நாடு கேடுகெட்ட இந்தியா

    ReplyDelete
  2. இதே வேலை இந்த தாக்குதலுக்கு முஸ்லீம் அரசியல் தலைமைகள்தான் பொறுப்பு கூற வேண்டுமென்றும் இவர் கூறியதாக சிங்கள ஊடகங்கள் நேற்று தெரிவித்தன. அவைகளை இங்கு காணவில்லை.

    ReplyDelete
  3. அனைத்தையும் சூறையாடி,பதவி பறிபோனபின்தான் ஞானம் பிறந்திருக்கின்றது இந்த பா.உ. மந்தி(ரி)க்கு.

    ReplyDelete

Powered by Blogger.