Header Ads



வெளிநாடுகளில் சவூதியிலேயே அதிக, இலங்கையர் கொரோனாவுக்குப் பலி


வெளிநாடுகளில் கொரோனாவுக்கு சுமார் 98 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் அதில் சவூதி அரேபியாவிலேயே அதிக மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இதுவரையில் சவூதி அரேபியாவில் மட்டும் 34 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும், ஓமானில் 4 பேரும், பஹரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் தலா இருவரும் இஸ்ரேலில் ஒரு இலங்கையரும் உயிரிழந்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் வசித்து வந்த ஐந்து இலங்கையர்களும் அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா நான்கு உயிரிழப்புகள் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

அதேநேரம், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா இரு உயிரழப்புகள் பதிவாகியுள்ளதுடன், ஈரானில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.