Header Ads



தோல்வி அடைவாரா டிரம்ப்..? தமது வாக்குகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு


தேர்தல் வாக்குகளை எண்ணும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனைத்து வாக்குகளையும் எண்ணும் நடவடிக்கையை தனது ஆதரவாளர்களின் வாக்குகளை பறிக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.

மில்லியன் கணக்கான மக்கள் எங்களுக்காக வாக்களித்தனர் என தெரிவித்துள்ள டிரம்ப் எங்கள் வாக்காளர்களின் வாக்குகளை பறிப்பதற்கு ஒரு குழுவினர் முயல்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் வெற்றியை கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தவேளையில் நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் வாக்குகளை எண்ணும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க மக்களின் மீது இழைக்கப்படும் மோசடி இது எங்கள் தேசத்திற்கான அவமானம் நாங்களே தேர்தலில் வெற்றிபெற்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.