முதன்முதலாக இலங்கையில் கைதி, ஒருவர் கொரோனாவால் மரணம்..!
சிறைச்சாலை கைதியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில், ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த 82 வயதான கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி சுகயீனமுற்ற நிலையில் றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதி, திடீரென உயிரிழந்தமையை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போதான பி.சி.ஆர் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment