Header Ads



'சில் ஆடை' வழக்கு - லலித், அனுஷ விடுதலை


´சில் ஆடை´ வழக்கு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடம் சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரை குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குமதுனி விக்கிரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தீர்ப்பினை வழங்கிய நீதிபதி குமதுனி விக்கிரமசிங்க, குறித்த வழக்கின் மனுதாரர் தரப்பினர் மற்றும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை விரிவாக பகுப்பாய்வு செய்து இந்த தீர்ப்பினை வழங்கியதாக குறிப்பிட்டார்.

1 comment:

  1. இது நாம் எல்லோரும் எதிர்பார்த்த நீதிமன்றத் தீர்ப்பு.இத்தகைய தீர்ப்புகள் இனித் தொடர்ந்து வரும் என்பது தான் இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை.

    ReplyDelete

Powered by Blogger.