Header Ads



ஜனாஸா நல்லடக்க அனுமதி, வர்த்தமானி புதன்கிழமை நள்ளிரவு வெளியாகுமா...?


- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் -


சுகாதாரத் அமைச்சின் தொழிற்நுட்பக் குழு, எதிர்வரும் புதன்கிழமை 11 ஆம் திகதி கூடவுள்ளதாக, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.


இதன்போது கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கலாம் என்ற வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அன்றைய தினத்தில் (12) நள்ளிரவே   வர்த்தமானியை வெளியிடலாம் என் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


திருத்தப்பட்ட வர்த்தமானியை வெளியிட 09.11.2020 அன்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ தலைமையில் கூடிய அமைச்சரவை, பச்சைக்கொடி காட்டிய நிலையில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி  கொரோனாவால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்யலாமென்ற வர்த்தமானியை வெளியிடுவாரென  எதிர் பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.