Header Ads



பொலிஸ் திணைக்களம் செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது - பிரதமர்


(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் தெரிவித்தார்.

அத்துடன் பொலிஸ் சேவையினை முன்னெடுத்து செல்லவும், தேசிய மட்டத்தில்  வழங்கப்பட்டுள்ள கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதாக பொலிஸ்மா அதிபர் பிரதமரிடம்  வாக்குறுதி வழங்கினார். 

35 ஆவது  பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரட்ன நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை  சந்தித்தார்.

இதன்போதே தேசிய பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சேவை குறித்து பிரதமர் பொலிஸ்மா அதிபரிடம் கலந்துரையாடினார். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. தான் சொல்வது போல போலீஸ் நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்வது போல இருக்குது.

    ReplyDelete

Powered by Blogger.