அபராதத் தொகையை செலுத்த கால அவகாசம்
போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவதற்கு மேலதிகக் கால அவகாசத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் இந்த கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அலுவலகப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாளின் பின்னர் அபராதத்தை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment