Header Ads



நாட்டுக்குத் திரும்பியவர்களை தனிமைப்படுத்தல், நிலையத்துக்கு அழைத்து சென்ற பஸ் விபத்து


நாட்டுக்குத் திரும்பிய சில​ரை, தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியது.

அதில், காயமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நாடு திரும்பிய சிலரை, அதி​வேக நெடுஞ்சாலையின் ஊடாக அழைத்துச் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸொன்றே, இவ்வாறு நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த பஸ்ஸின் முன்சில்லு திடீரென வெடித்தமையால் அப்பஸ்,  பாதுகாப்பு வேலியில் மோதியதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கட்டுநாயக்க-கொழும்பு அதி​வேக நெடுஞ்சாலையில், 25ஆவது கிலோமீற்றரில் இவ்விபத்துக்கு இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.