உடல்களை அடக்கம் செய்யலாமாவென, நிபுணர்கள் குழு ஆராய்வார்கள் - பவித்திரா
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என சுகாதார அமைச்சரும் நீதியமைச்சரும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான பொருத்தமான வழிமுறைகள் குறித்து ஆராயும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கலாமா என்பது குறித்தும் குறிப்பிட்ட குழுவினர் ஆராய்வார்கள் என தெரிவித்துள்ளனர்.
நீங்கள் சுகாதார அமைச்சராக எங்களுக்கு கிடைத்தது ஒரு அநியாயமே. பொறுப்பற்ற பேச்சும் திட்டங்கள் இல்லாத போக்கும் நாட்டை எங்கு கொண்டுபோய் சேர்க்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
ReplyDeleteஒன்றும் கை கொடுக்காது என்று பயந்து மந்திரித்த தண்ணீரை ஆற்றில் கலந்து பார்த்தீர்கள். நல்லது நடக்கட்டும்.
அந்த நிபுணர்கள் என்ன நிறம் அம்மா ? அது தெரிந்தால் கடைசி காலத்தை இலங்கையிலா அல்லது உலகின் ஏதேனும் ஒரு நாட்டில் கழிப்பதா என்று யோசிக்கலாம்.
ReplyDelete