பாகிஸ்தான் வைத்தியர்களுக்கு சவுதி அரேபியா விருது வழங்கி கெளரவிப்பு
கொரோனா வைரஸ் பரவலின் போது சவுதி அரேபிய நாட்டுக்கு ஆற்றிய சேவைகளுக்காக பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு சவுதி அரேபியா அரசு தலைமை விருதை வழங்கி கெளரவித்திள்ளது. சவுதி அரேபியாவில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் குழுவை பாகிஸ்தான் மருத்துவர் வழிநடத்தியதாக அரபு செய்தி கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
விருதைப் பெற்ற டாக்டர் ஷாஜாத் அஹ்மத் மும்தாஸ், ரியாத்தில் உள்ள கிங் சல்மான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவராக கடமையாற்றுகிறார்.செப்டம்பர் 23, சவுதி அரேபியாவின் தேசிய தினத்தன்று சவுதி சுகாதார அமைச்சகம் அவருக்கு இவ்விருதை வழங்கி கெளரவித்தது.
கிங் சல்மான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவின் (ஐ.சி.யூ) தலைவராக எனது சேவைகளை அங்கீகரிப்பதற்காக, சவுதி சுகாதார அமைச்சகத்தால் எனக்கு தலைமை விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, ”என்று மும்தாஸ் "அரப் நியூஸ் " இக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.மும்தாஸ் பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள லயா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். அவர் கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , சுகாதார அமைச்சின் பொது சுகாதார நிபுணராக பணியாற்றி வருகிற பாகிஸ்தானிய மூத்த சுகாதார நிபுணரான டாக்டர் ஜியா உல்லா கான் தாவர் சவூதி அரேபியாவின் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு வலுவான கண்காணிப்பு முறையை வடிவமைப்பதில் மும்முரமாக ஈடுபாடு கொண்டவர். புனித நகரமான மக்காவில் சர்வதேச பயணிகளுக்கான முதல் தனிமை மையத்தை நிறுவ நியமிக்கப்பட்ட குழுவில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
அவரது சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், சுகாதார அமைச்சகம் அவருக்கு “கோவிட் -19 அணியின் கேப்டன்” பதக்கத்தை வழங்கி கெளரவித்துள்ளது.
இவ்விரு விருதுகளும் தனிநபர்களை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், சவூதி அரேபியா - பாகிஸ்தான் உறவுகளுக்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் கருதப்படுகின்றது.
Post a Comment