Header Ads



9 மாகாணங்களிலும் கொரோனா நல்லடக்கதிற்கு, அனுமதி கோரி நடவடிக்கை


- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் -


கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மன்னார் மாவட்டத்திற்கு எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நாட்டில் 9 மாகாணங்களிலும், இதற்கான அனுமதியைப் பெற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.


இதற்கான முயற்சிகளை ஆளும்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டுள்ளனர். தமது பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.


ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு பகுதியில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டால், அது எதிர்கால சிரமங்களை தவிர்க்க  உதவும் என்ற நம்பிக்கையில், இந்த அனுமதி கோரப்பட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.


முன்னர் இருந்ததைவிட, தற்போது நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திலும் கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரும் பரிந்துரையை முன்வைத்துள்ளதாகவும் அந்த ஆளும்தரப்பு முஸ்லிம் எம்.பி. கூறினார்.

2 comments:

  1. இவனுவள் ஆணி புடுங்காம இருந்தா மிச்சம் நல்லம்

    ReplyDelete
  2. இப்போது கிடைத்த அனுமதி பெறிது.
    காலம் மாற்றத்தை தரும்.
    எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

    ReplyDelete

Powered by Blogger.