Header Ads



மஹர சிறைக்கு முன் இன்று பதற்றம் - நேற்றைய சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 71 ஆக அதிகரிப்பு


மஹர சிறைச்சாலைக்கு முன்பாக மக்கள் கூடியுள்ளதுடன், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள சுமார் 100 கைதிகளுக்கும் மேற்பட்டவர்களின் உறவினர்களே சிறைச்சாலைக்கு முன்பாக கூடியிருக்கின்றது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது என வைத்தியசாலைகளின் தலைவர்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த இன்னும் சில கைதிகள், கொழும்பு வடக்கு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது

2 comments:

  1. நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கிறது .....திருத்திக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. எழுத்துப்பிழைகள் என்பதை விட இலக்கணப் பிழைகள் எனலாம்

    ReplyDelete

Powered by Blogger.