Header Ads



கொரோனாவினால் மரணம் 58 ஆக உயார்வு - இன்று ஞாயிற்றுக்கிழமை 5 பேர் மரணம்


இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இவ்வாறு உயிரிழந்தோர் அனைவரும் ஆண்களாவர். 

கொழும்பு 13 ஐ சேர்ந்த 54 வயதுடையவரும், கொழும்பு 15 ஐ சேர்ந்த 39 வயதுடையவரும், கொழும்பு 12 ஐ சேர்ந்த 88 வயதுடையவரும், கொழும்பு 08 ஐ சேர்ந்த 79 வயதுடையவரும் மற்றும் கொழும்பு 13 ஐ சேர்ந்த 88 வயதுடையவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.




No comments

Powered by Blogger.