மின்னல் தாக்கி 250 கோழிக் குஞ்சுகள் பலி - முல்லைத்தீவில் சம்பவம்
-விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவில், அண்மைய நாள்;களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஆங்காங்கே மின்னல்தாக்கங்கள் பதிவாகியுள்ளன.
அந்தவகையில், நேற்று முன்தினம் (09) முள்ளிவாயக்கால் பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால், தென்னை மரம் ஒன்று முறிந்துள்ளதுடன், வாழ்வாதாரத்தின் நிமித்தம் வளர்க்கப்பட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment