கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் மேலும் 458 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 967ஆக உயர்ந் துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 465 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந் தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5ஆயிரத்து 911பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 480 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 94பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment