Header Ads



200 ஊடகவியலாளர்களை கைதுசெய்ய திட்டம் – இம்தியாஸ் Mp பாராளுமன்றத்தில் தெரிவிப்பு


அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் 200 பத்திரிகையாளர்களை கைதுசெய்யும் திட்டம் இலங்கை பொலிஸாரிடம் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அரசாங்கம் பத்திரிகையாளர்களை இலக்குவைக்கின்றது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் பட்டியலொன்றை பொலிஸாரிடம் வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களை கைதுசெய்வதற்கான உத்தரவினை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

200 ஊடகவியலாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் , நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் வழங்கியுள்ளது என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இளம் தலைவராகயிருந்தவேளை மகிந்த ராஜபக்ச மனித உரிமைக்காக போராடி ஜெனீவா வரை சென்றவர் என்பதை இம்தியாஸ் பாகீர் மார்க்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக மனித உரிமைகளிற்காக குரல்கொடுத்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அதற்கு எதிரான வழியில் பயணிப்பது நல்லதல்ல என தெரிவித்துள்ள இம்தியாஸ் பாகீர் மார்க்கார் அவ்வாறான அரசாங்கமொன்றை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இது கடந்த காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முழு உலகமும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது,சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது,தொழிற்சாலைகளும் வர்ததகநிலையங்களும் மூடப்பட்டுள்ளன,வர்த்தக நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்,தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உணரவேண்டும் என தெரிவித்துள்ள இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மனிங் சந்தையில் நாளாந்தம் உழைப்பவர்கள் முதல் தனது முச்சக்கர வண்டியை லீசிங்கில் பெற்ற முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் நாளாந்த வருமானம் உழைப்பவர்கள் அனைவரும் பெரும் துயரத்தில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை மிகவும் நெருக்கடியான தருணங்கள்,அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உதவவேண்டும்,எனினும் வரவுசெலவுதிட்டத்தில் இதனை காணமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மதிப்புக்குரிய இம்தியாஸ் பாகிர் மாக்கார், பாராளுமன்ற அங்கத்தவர் அவர்களே, உங்கள் கருத்தை மனமார மெச்சுகின்றோம். அரசாங்கத்தின் சூழ்ச்சிகளை முன்னமே அறிவித்து மக்களுக்கு எச்சரிக்ைகயாக அவற்றை கூறும் உங்கள் கருத்தையும் நியாயமான விடயங்களில் உங்கள் கருத்தையும் தொடர்ந்து முன்வையுங்கள். அது இந்த நாட்டில் நீதியையும் நியாயத்தையும் விரும்பும் மக்களுக்கு ஒரு உறுதுணையாக இருக்கும்.அதற்கான சக்தியையும் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் அல்லாஹ் அருள வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.