Header Ads



வீட்டில் இருந்து வெளியேற 2 பேருக்கு மாத்திரமே அனுமதி ((முக்கிய அறிவுறுத்தல்கள்))


ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் செயற் பாட்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்துசுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை 3 ஆவது ஆபத்தான நிலை என கருதப்படுகின்றது.

இதன் படி, வீட்டில் இருந்து வெளியேற இரண்டு பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

பஸ் மற்றும் புகையிரதம் போன்ற பொது போக்குவரத் தின் இருக்கைக்கு நுற்றூக்கு 75 சதவீதம் வரை அனுமதிக் கப்படுகிறது.

அரச மற்றும் தனியார்த் துறை அலுவலகங்களில் குறைந்த பட்ச ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும்.

சூப்பர் மார்க்கெட் மற்றும் வியாபார நிலையங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் மூடப்பட வேண்டும்.

உட்புற,  வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.