Header Ads



இங்கிலாந்தின் ‘பாதுகாப்பான கோவிட் -19 நாடுகள்’ பட்டியலில் இலங்கை


இங்கிலாந்தின் ‘பாதுகாப்பான கோவிட் -19 நாடுகள்’ பட்டியலில் இலங்கை  உள்பட ஐந்து நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் தனிமைப்படுத்தல் விதிக்கு அமைய வேறு நாடுகளில் இருந்து செல்பவர்கள் அங்கு  14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்

எனினும் இங்கிலாந்து  இலங்கை  உள்பட ஐந்து நாடுகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது.

அதற்கமைய இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு செல்லும் பயணிகள், இங்கிலாந்தற்கு சென்றதும்  14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டியதில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும் இஸ்ரேல், உருகுவே, நமீபியா, மற்றும் ருவாண்டா  ஆகிய நாடுகளில் இருந்து இங்கிலாந்தற்கு செல்பவர்கள் அங்கு சென்றதும்14 நாட்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"பயண தாழ்வாரங்கள்" என்று அழைக்கப்படும் வாராந்த கொரோனா தொற்று காட்டுபாடுகளின் புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் ஜெருசலேம், பொனெய்ர், அமெரிக்க விர்ஜின் தீவுகள், சிண்ட் யூஸ்டேடியஸ் மற்றும் சபா, மற்றும் வடக்கு மரியானா தீவுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இவ் விதிவிலக்கு அளிக்கப்படும்.

இங்கிலாந்துக்கு பொறுப்பான இங்கிலாந்து அரசாங்கமும், மீதமுள்ள நாடுகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட மூன்று நிர்வாகங்களும் தங்களது சொந்த தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியல்களுக்கு பொறுப்பாக உள்ளன.

வாரந்த சந்திப்பில் கொரோனா கட்டுபாடுகள் தொடர்பில்  அனைத்து நாடுகளின் நிர்வாகங்களும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுகின்றன.

சில நாடுகளின் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், இங்கிலாந்துக்கு செல்லும் எவரும் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவடையும் இரண்டாவது தேசிய முடக்கத்தின் "வீட்டில் இருக்க வேண்டும்" விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.