Header Ads



முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த, 15 கோடி ரூபா கப்பம் கேட்ட கருணா - அம்பலப்படுத்திய நாமல் குமார


நாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் என்றும்-தாக்குதல் ஒப்பந்தம் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும்-அதற்காக கருணா 15 கோடி ரூபா கேட்டார் என்றும் புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார்.

துஸார பீரிஸ் என்பவர் ஞானசார தேரர் அங்கம் வகிக்கும் எமது மக்கள் சக்தி என்ற கட்சியுடன் தொடர்புடையவர்.

'பிரபாகரன்' என்ற சிங்கள திரைப்படத்தை தயாரித்தவர்.சில பிரச்சினைகள் காரணமாக அந்த திரைப்படம் திரையிடப்படவில்லை.இப்போது அவர் பிரான்ஸில்....

அங்கிருந்து நாட்டின் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்துவதற்காகவே இப்படியான வேலையை செய்வதற்கு திட்டமிட்டாராம்.

இந்தக் கொலைத் திட்டத்தை சரியாக நிறைவேற்றக்கூடியவர் கருணாதான் என்பதால் துஷாரா பீரிஸ் பௌத்த தேரர் ஒருவரின் ஊடாக கருணாவை தொடர்பு கொண்டபோதுதான் 15 கோடி ரூபா கேட்டாராம் கருணா.

பேரம் பேசலில் ஏற்பட்ட இழுபறி காரணமாக-அது பெரும் தொகை என்பதால் அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் நாமல்.

3 comments:

  1. The chances are that this will be DENIED by both parties. Still, it is up to the Muslim Community leaders to Confront Karuna, who is on a War Path against the Muslims in Sri Lanka, particularly, those in the East.

    ReplyDelete
  2. தனக்கு பிழைக்கும் போது உண்மையை சொல்லாமல்தேவையான சந்தர்ப்பத்தில் தான் அதை வெளிப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. இது, தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பகையை ௨ருவாக்கி லாபம் காணச் செய்யும் ஒரு நாடகமன்றி வேரொன்றுமல்ல! தமிழ், முஸ்லிம் சகோதரர்களே, சதிவலையில் சிக்கி விட வேண்டாம்!

    ReplyDelete

Powered by Blogger.