Header Ads



முஸ்லிம்களுக்காக பேசுவதை TNA நிறுத்த வேண்டும், புலம்பித் திரிபவர்களே முஸ்லிம் தலைவர்கள் - கலையரசன் Mp


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் சேர்த்து தமிழர்களின் சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர். அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தேசிய தலைவர்கள் திருந்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இருபதாவது சீர்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனை மூவின மக்களும் எதிர்த்துள்ளனர். இந்த சீர்திருத்தத்தை சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து இருப்பது மன வேதனைக்குரிய விடயம்.

20ஆவது திருத்தம் என்பது நிறைவேற்று அதிகார நடைமுறையை பெற்றுக் கொடுக்கிறது. இதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்து செல்கின்றது.

19ஆவது சீர்திருத்தத்தில் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவான நியாயமான பல செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவான ஒரு காரணியாக இருந்தது. இருபதாவது சீர்திருத்த நடைமுறையில் எமது தமிழ் தேசிய தலைமைகள் நிதானமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

20வது சீர்திருத்தத்தை எமது தலைவர்கள் யாரையும் துன்புறுத்தி செயற்பட வைக்கவில்லை. இதனை இதற்கு முதலும் செய்ததில்லை. இனி வரும் காலத்திலும் செய்யப் போவதுமில்லை. சீர்திருத்தத்தில் உள்ள பாதக,சாதக தன்மைகளை எடுத்துரைக்கும் சக்தியாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் இருந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்ஒருவர் இனங்களிடையே துவேசத்தை விதைத்து பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அவர் திருந்த வேண்டும். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18வது சீர்திருத்தத்தை எதிர்த்தது, 19 ஐ ஆதரித்தது , 20 ஐ எதிர்க்கின்றது இதனை நன்கு ஆராய்ந்த பிறகு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

முஸ்லிம் தலைவர்களை பொருத்தளவில் 18,19,20, சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளனர். அது மாத்திரமல்ல கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட திவிநெகும சட்டத்தை கூட ஆதரித்து விட்டு பாரிய தவறு இழைத்து விட்டோம் என்று புலம்பித் திரிந்தவர்கள் தான் இந்த முஸ்லிம் தலைவர்கள்.

இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினர். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் சேர்த்து தமிழர்களின் சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர்.

அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தேசிய தலைவர்கள் திருந்த வேண்டும்.

இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்முனை மாநகரில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகச் செயல்களை நாங்கள் மறந்துவிடவில்லை.

நல்லாட்சியில் அமைச்சுப் பதவிகளை எடுத்த கையோடு எமது பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதை மறந்துவிட்டு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

தமிழ் முஸ்லிம் உறவு விடயத்தில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களைப் போன்று எமது தமிழ் மக்களை நசுக்கி விடலாம் என்ற கனவினை மறந்துவிட வேண்டும். நமது மக்கள் விழிப்புடன் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. ஆமாம் இதுவரை TNA கிழடுகள் (சுமந்திரனை தவிர) முஸ்லிம்களுக்காக கிழித்தது என்ன? கருணாவும் சக்கிலி வியாழேந்திரனும் முஸ்லிம்களுக்கு எதிராக பேசும்பொழுது இந்த கலையரசன் ஒரு கண்டனம் தெரிவித்தானா? பின்பு எதற்கு உங்களுக்கெல்லாம் முஸ்லிம்களின் அரசியலில் தலையீடு? ஒன்றுக்கும் உதவாத தமிழ் அரசியல் குப்பையில் இருக்க வேண்டியது. அதை முஸ்லிம்கள் சுமந்துகொள்ள முஸ்லிம்கள் முட்டாள்களில்லை

    ReplyDelete
  2. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்களை ஏமாற்றி, அரசுக்கெதிராக போராடும்போது, பேசும்போது மாத்திரம், முஸ்லிம்களை தடவிக்கொடுத்து "தமிழ்பேசும் மக்கள்" "சிறுபான்மை மக்கள்" என்று நஞ்சூட்டப்பட்ட பசப்பு வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு தங்கள் விடயங்களை சாதித்துக்கொள்வதும், அதேநேரம் அரசிடமிருந்தோ, வேறு நிறுவனங்களிடமிருந்தோ எந்தவொரு உதவி கோரும் நேரத்திலும், கிடைக்கும் நேரத்திலும் "தமிழர்கள்" மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள், தமிழர்களுக்கு மட்டுமே உரியது என்று தட்டிப்பறித்துக்கொண்டு, உரிமை கொண்டாடுவதும் தாங்கள் மாத்திரமே கட்டியாள்வதும் இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம்களாகிய நாங்கள் அறியாத, புரியாத விடயமுமல்ல. இப்படியே நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் உங்கள் வால்களை பிடித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் திரிய நாங்கள் முட்டாள்களுமல்ல.

    நீங்கள் சொன்னாலும் சொல்லவிட்டாலும் நாங்கள் இன்னொரு சிறுபான்மைதான், எங்கள் உரிமைகளையோ சலுகைகளையோ பெற நாங்கள் முழு உரிமை பெற்றவர்கள் , என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. good , cheating fellows as mulim political people , how much did get from rajapaksa thugs government , specially nazeera ahammed protect his bussiness

    ReplyDelete
  4. அறிவிலிகள். முஸ்லிம்களுக்காக முஸ்லீம் தலைவர்களீ பேசாத நேரத்தில் தமிழ் தலைவர்கள் பேசுவதா.?

    ReplyDelete
  5. Paarra....neenga pulambaama iruntha pothum... Ennai ooottathinga Mr. By-chance MP...!

    ReplyDelete
  6. கலையரசரன் சொல்லுவது உண்மை.
    எதிரிகளை நம்பலாம் ஆனால் துரோகிகளை நம்பகூடாது.

    ReplyDelete
  7. ஒன்றில் இஸ்லாம் அல்லது முஸ்லிம் இரண்டில் ஒன்றை நீங்கள் உச்சரிக்காவிட்டால் உங்களுக்கு நித்திரை வராதேடா. நீங்கள் சொல்வதெல்லாம் முஸ்லிம்கள்ளின் தலைவர்கள் இல்லை. அவர்களையெல்லாம் நம்பி முஸ்லிம் சமூகம் இருக்கவில்லை.

    ReplyDelete
  8. கலையரசனுக்கு வாழ்த்துக்கள். இதுவரை காலமும் எந்தத் தமிழ்த் தலைவர்களும் எடுத்துச் சொல்லாத விடயத்தை தாங்கள் நவின்றமைக்காக உங்களைப் பாராடடாமல் இருக்கவே முடியாது. மக்களின் தலைவர் என்ற மகுடத்தைச் சூடியுள்ள நீங்கள் அரசியல் பொறுக்கிபோல் நடக்கக்டகூடாது. தமிழர் தேசியக கூட்டமைப்பின் தலைவர்களின் போக்கினைப் பின்பற்றி இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் பேணி நடப்பதே சாலச் சிறந்தது. இதுவரையும் எந்தத் தமிழ்த் தலைவரகளும் கூறத் துணியாததை தாங்கள் கூற முன்வந்திருப்பது விசனத்திற்குரியது.

    தற்போதைய முஸ்லிம் தலைவரகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கலமுனையில் இருந்து செய்வார்களாக இருந்தால் அவற்றைத் தெளிவான முறையில் என்னென்ன செய்தார்கள் என்பதனை பட்டியல் இட வேண்டும். சும்மா கபளீகரம் துரோகச் செயல் என்று வார்த்தகளை அடுககிக் கொண்டு செல்லக்கூடாது. முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களுக்குக்குச் செய்த அநியாயங்களை நீங்கள் பிட்டு பிட்டு வைக்கும்போது அதனை முஸ்லிம் மக்களும் அறிந்திருக்க வேண்டும். பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் அள்ளி வீசி தமிழ் மக்களை சூடேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
    தற்போதைய முஸ்லிம் தலைவரகள் தமிழ் மக்களுக்கு எதிஜர8hனன நடவடிக்கைகளை கலமுனையில் இருந்து செய்வார்களாக இருந்தால் அவற்ரைறத் தெளிவான முறையில் என்னென்ன செய்தார்கள் என்பதனை பட்டியல் இட வேண்டும். சும்மா கபளீகரம் துரோகச் செயல் என்று வாரத்தைகளை அடுககிக் கொண்டு செல்லக்கூடாது. முஸ்லிம் தலைவர்கள் தரமிழ் மக்களுக்குக்குச் செய்த அநியாயங்களை நீங்கள் பிட்டு பிட்டு வைக்கும்போது அதனை முஸ்லிம் மக்களுமட்' அறிந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  9. இப்பொழுது தான் ஞானதோயம் வந்திருக்கிறது. முஸ்லிம்கள் எந்த அடிப்படை மனித பண்புமாற்றவர்கள் .அவர்களுடன் சகவாசம் வைத்திருப்பவர்கள் கடைசியில் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள். அதுவும் இலங்கையிலுள்ளவர்களை பற்றி சொல்லவே தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.