Header Ads



நாட்டு மக்கள் கொரோனாவிலிருந்து விடுபட, மேர்வின் சில்வா சத்தியாக்கிரகம்


நாட்டு மக்களும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.


அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


களனி – தலுகம – புலுகஹசந்தி பிரதேசத்திலுள்ள உத்பலவர்ண ஸ்ரீ ரங்கநாத விஷ்ணு கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட அவர் அதனைத் தொடர்ந்து அந்த ஆலயத்திற்கு முன்பாக அமர்ந்திருந்தவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.


தனக்கு வாக்களித்த  மக்கள், கம்பஹா மாவட்டத்திலுள்ளவர்களும் அதேபோல நாட்டு மக்களும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என்பதே தனது இந்த போராட்டத்திற்கான நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. 'மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்;

    பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்'.

    (அல்குர்ஆன் : 30:33)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.