Header Ads



இலங்கை வரலாற்றில் இன்று மிகவும் முக்கியமான நாள் - கரு



இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனச் சாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் முன் னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார ஆட்சிக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

1933ஆம் ஆண்டு ஜேர்மனிய பாராளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும், அவ்வா றான ஓர் தவறை எமது பாராளுமன்றம் செய்து விடக் கூடாது எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.