´கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு - மதூஷின் மரணம் பற்றி பொலிஸ் அதிகாரி பதிவு
மாகந்துரே மதூஷின் மரணம் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தனது பேஸ்புக் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸ் குற்றவியல் வரலாற்று ஆவணங்களில் மதூஷ் என்ற பெயரை முதலில் உள்ளிட்ட நபர் தான் என்றும் நீர்கொழும்பு, காலி, கம்பஹ மற்றும் குளியாபிட்டிய ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத கொள்ளைகள் தொடர்பாக கடந்த 2006 ஆம் ஆண்டில் வாரியபொல பிரதேசத்தில் வைத்து மதுஷை தான் கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கிடைத்த தகவலின் படி மதுஷிற்கு துபாய் மாநிலத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ஒரு கார் பார்க் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களில் பாதாள உலக தலைவர்களாக காணப்பட்ட அங்கொடை லொக்கா மற்றும் எஸ்.எப் லொக்கா கொலை செய்யப்பட்டு இன்னும் இரண்டு மாதங்களும் ஆகாத நிலையில் ´கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு´ என்ற பழமொழிக்கேற்ப எதிர்காலத்திலும் பல பாதாள உலகத் தலைவர்களின் அழிவு இருக்கும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment