கணவனுக்கு கொரோனா என தெரிந்தும், பணிக்கு சென்ற மனைவியால் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பு
தனது கணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அறிந்தும் பணிக்கு சென்ற பெண்ணால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலையில் பணியாற்றியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவன் மினுவாங்கொட பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் எனத் தெரிய வந்துள்ளது.
Post a Comment