Header Ads



இரத்தத்தில் எழுதி கையெழுத்திட தயார் - வடிவேல்


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரத்தத்தில் எழுதி கையெழுத்திட தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்கான கோரிக்கை மனுவை வாபஸ் பெறுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ள நிலையிலேயே, வடிவேல் சுரேஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

இருப்பினும் எந்தவொரு சிறைக் கைதியையும் விடுதலை செய்வதற்கு தான் எந்தவொரு ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அவர் தனது முகப்புத்தக கணக்கில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

இருபதாவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் மலையக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு அதனை எதிர்த்து வாக்களித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.