ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊழியருக்கு கொரோனா
ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பணியாளர்ஒருவர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேசவிமானநிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட பணியாளர் கம்பஹாவை சேர்ந்தவர் எனவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் எனவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.அவருக்கு வெளியிலிருந்தே நோய் தொற்றியிருக்கலாம் என கருதப்படுவதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட பணியாளருடன் பணிபுரிந்த50 பேரை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
Post a Comment