Header Ads



தற்போதைய அரசாங்கம் அவல நிலையில் இருக்கும், மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்குமா ???


இன சுத்திகரிப்பு செய்யப்பட்டு 30 வருடங்கள் ஆகியும் வடமாகாண முஸ்லிம்களின் நிலை அவல நிலையாகக் தான் இருக்கின்றது.

 பாசிச புலிகள் இன்று உயிருடன் இல்லை .

அவர்கள் இல்லை என்றதால் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசாங்கம் தான் பொருப்பு கூற வேண்டும் .

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் அந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

கடந்த கால அரசாங்கத்தில் முஸ்லிம் மீள்குடியேற்ற கெபினட் மினிஸ்டராக இருந்த முன்னால் ரிஷாட் பதுருதீன் இருந்தும் சரியாக எதுவும் நடக்கவில்லை.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இருந்தும் முஸ்லிம்களின் பகுதியில் எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை.

வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஜயா இருந்தும் புரக்கனிக்கப்பட்டனர்.

புலிகளால் விரட்டப்பட்ட மக்களுக்கு புலிகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினராலும் ஓரங்கட்டப்பட்டனர்.

 அந்த மக்களின் கேள்விகள் எல்லாம் இலந்ததை மீட்டுத் தாருங்களே தவிர நாட்டை பிரித்துத் தாருங்கள் என்பதில்லை.

எனவே 30 வருட கொடுர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தற்போதய அரசாங்கம்மாவது  அவல நிலையில் இருக்கும் மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்குமா ???

Jaffna Muslim Community - International - JMCI

No comments

Powered by Blogger.