கற்பிட்டியில் நிகழ்ந்த மரணம் கொரோனாவால் ஏற்பட்டதல்ல, வதந்தி பரப்பாதீர்கள் - அச்சம் தவிருங்கள்
கற்பிட்டியில் 24ஆம் திகதி பீசிஆர் பரிசோதனையின் போது மரணமடைந்த 32 வயது நபரின் மரணமானது கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டதல்ல என புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம் தெரிவித்துள்ளார்.
குறித்த மரணம் கொரோனாவால் ஏற்பட்ட மரணம் என வதந்திகளை பரப்பிய மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எம்.யூ.எம்.சனூன்
Post a Comment