Header Ads



குழந்தை என் முகமூடியை, பிடித்து இழுத்தது


துபாயில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வரும் சமர் ஷைப் மற்றும் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று அவரது முகமூடியை இழுத்திருப்பதை போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது! அவர் அந்த புகைப்படத்தை பற்றி கூறியதாவது, "c section மூலமாக பிறந்த இரட்டை குழந்தையில் ஒருவன் தான் அவன். குழந்தையின் தந்தை போட்டோ எடுக்கும் பொருட்டு நான் என் கைகளில் தாங்கி பிடித்திருந்த சமயம்.. குழந்தை தற்செயலாக என் முகமூடியை பிடித்து இழுத்தது!" மேலும் அவர் இந்த புகைப்படம் நாம் அனைவரும் விரைவில் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்புவோம் என்பதற்கான அறிகுறியாகும் என்றும் கூறியுள்ளார் .

No comments

Powered by Blogger.