ஆளும் கட்சியின் கூட்டத்தில், விஜயதாசவை காணவில்லை
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடாத்தப்பட்ட விசேட கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ச பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் -20- கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்ற போதிலும் அதில் விஜயதாச ராஜபக்ச பங்கேற்றிருக்கவில்லை.
விஜயதாச ராஜபக்சவை தவிர்ந்த ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தின் போது 20ம் திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறு விளக்கமொன்றை அளித்துள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கூட்டுப் பொறுப்பினை புரிந்துக்கொண்டு செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment