வாக்குமூலமளிக்க மீண்டும் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (05) ஆஜராகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 05ஆம் திகதி முன்னிலையாகினார்.
அன்றைய தினம் வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவரிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்று (12) மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, குறித்த ஆணைக்குழுவில் கடந்த 06ஆம் திகதி ஆஜரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கினார்..
இதனையடுத்து, நாளை (13) ஆணைக்குழுவில் மீண்டும்ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment